புதன், 26 நவம்பர், 2014

வெள்ளி, 5 நவம்பர், 2010

என் கவிதை - தாய் நாடு

கீழ் வானில் தோன்றிடும் ஒளியில்
கிளர்ந் தெழுந்து,
உழைப்பையே உயிர் எனக் கொண்டோம்!
உண்மையை வாழ்வெனக் கண்டோம்!
கனவுகள் சுமந்த ஒரு பயணம்
வாழ்வினில் களிப்பே எமது ஜனனம்…

கந்தையானாலும் கசக்கிக் கட்டி
கஞ்சியை வார்த்து வயிறு காய்ந்து
பட்ட கஸ்டத்திலும் நம்மை
சாக விட்டதில்லை தாய் நிலம்
முற்றத்து மாமரம் - மூன்று வேளைக்கு
ஒருவேளை உணவளிக்கும்
கிணற்றடி இலுப்பை
புது வருடத்திற்குப் புடவை தரும்

பூத்துக் குலுங்கும் மல்லிகை
வாசம்…
பூவை பறித்து அழகாய்த் தொடுத்து
வெள்ளிக் கிழமைகளில்
அயல் தெரு ஐயனார் கழுத்தில்
அணி செய்து வரம் வேண்டிடும் - காலம்
வருமோ நம் வாழ்வில்!


வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
மழை நீர் அருந்த மனதினில் மோகம்
மறைவினில் நின்று நன்றே நனைந்து
மழையே மழையே மெத்தப் பெய்யென
மெத்தவே பாடி வெள்ளமடித்து…
நிறைந்த வயல் கிணற்றில் நீந்தி
அம்மா அடிப்பாள் என்ற அச்சத்தில்
நனைந்த ஆடைகளைக் களைந்து
வரம்பு மேடுகளில் போர்த்தி
கதிரவனின் கருனணயால் அவை காய
கதிர்களின் செழிப்பால் நம்
நிர்வாணம் மறைய…
இவை யெல்லாம் கனவல்ல நம் தாய்நிலத்தில்
நடந்தேறிய நிஜம்!

காகிதத்தில் கப்பல் செய்து
மாரிவெள்ளத்தை கடலாக்கி
அக் கடல் நடுவே ஓடவிட்ட
காலம் கரையவில்லை இன்றும்!

காலை நேர சாலை எல்லாம்
கதை சொல்லும்...
வெள்ளை மனம் வெள்ளை குணம்
வெள்ளை உடை உடுத்து
பள்ளி செல்லும் பாலகர்கள்
பாதை எங்கும் மழலை மொழி
மனது இனிக்கும் கண்குளிரும்
காட்சி அவை!


கண்களில் கனவுகள் சுமந்து
கண்ட போதெல்லாம் கனிவாய்ச் சிரித்து
உழைக்க விரையும் சோம்பல் மறந்த
உறவுகள் பலர் அந்த நினைவுகள்
சில - இன்றும்
மீட்டிப் பார்க்கும் போது சிலிர்க்கின்றது மெய்!


பக்கத்தித் தெரு பங்கஜம்
பெரியவளானதும் சடங்கு
அவள் வளர்ந்ததும் கெட்டி மேளம்
கொட்டி இல்வாழ்வுக்கு
அனுமதிக்கும் உறவுகள்
அவளின் கண்ணிய வாழ்வின் சாட்சியாய்
கையில் தவழும் குழந்தைக்கு
காது குத்தி கொழுக்கட்டை கொட்டி
முதல் அகவை கொண்டாடி
நூறகவை வாழ வாழ்த்தும்
தலை நரைத்தும் குணம் நரைக்காத
கூட்டங்கள் எம்மிடத்தில் மட்டும் தான்!

அயல் வீட்டு அம்பலத்தார் சாவு
அடுத்த தெரு வரை கேட்கும்
பறை, ஒப்பாரி ஓலம்
எட்டுக்கு மச்சம், முப்பத்தொன்றில்
துடக்கு நீக்கி சோறு கறி பாயாசம்...
சாப்பிட்ட வாய்க்கு போட்டுத் துப்பிய
வெற்றிலையின் ஈரம் காயாத மண்
எம் தாய் மண்


வேலியில் பொட்டிட்டு
பொட்டிட்ட மங்கைகள்
மாலையில் கூட்டம்
முற்றத்து வேம்பில் வெளிப்பட்ட
வேர்களில் அயலவர் கூட்டம்
உறவுக்கு வேர் சேர்க்கும்
உன்னத நாடு நம் தாய்நாடு!

கொஞ்சம் சண்டை
கொஞ்சம் மகிழ்ச்சி
துன்பமும் இன்பமும் வாழ்வின்
இரு பக்கங்கள் என்பதை
இனம் காண முடிகிறது
எம் மண்ணில்!

சந்திக்கு அடுத்துள்ள சந்துகளில்
சந்திக்கும் இளவட்டம் இனிதாய்
மொழி பேசி நம்மைக் கண்டதும் முழிக்கும்
நல்ல வேடிக்கை! நம் நாட்டில் வாடிக்கை!

பொன் மாலைப் பொழுதில்
வான மகள் நாணம் கொண்டு
வேறு உடை பூண்டு வர
பூமரங்கள் வீசும்
சாமரங்களுக் கிடையில்
பூவரசம் வேலிகளில் புலுனிக் குஞ்சுகளின் ஆட்சி
அந்தி மழையின் துளிகளுக்கு அஞ்சி
படையெடுக்கும் அந்துப் பூச்சிகளின் பட்டாளம்
இயற்கையே விருந்தளிக்கும் செந்தமிழ் நாடு
இன்பத் தேன் தந்த நாடு நம் நாடு!


வருடத்தின் பலநாளில்…
பாதி நாட்கள் மச்ச உணவு
மீதி நாட்கள் கோயில் திருவிழா
காண்டா மணி ஓசை!
ஐயரின் மந்திரச் சத்தம்!
வேட்டிகள் தொங்கும் வீட்டுக் கொடிகள்!
விசிலடிக்கும் சின்னப் பையன்கள் கூட்டம்!
சாலை ஓரம் நீண்டிருக்கும் பெட்டிக் கடைகள்!
கடல் கடந்து வந்தாலும் மறந்திட முடியுமா?


இன்னும் சங்கதிகள் பல
சொல்ல இனித்திடும்!
ஒரு வார்த்தையில் முடிக்கிறேன்
சொர்க்கமே என்றாலும் அது
நம் நாட்டுக்கு ஈடாகுமா?

சனி, 12 ஜூன், 2010

மூலிகைத் தோட்டம்

மூலிகைத் தோட்டம் என்பதன் வரைவிலக்கணம்

அழிந்து கொண்டு செல்லும் மூலிகைகளைப் பாதுகாக்கவும் அரிதாகக் கிடைக்கும் மூலிகைகளை பரம்பல் படுத்துவதற்கும,; எல்லா வகையான மூலிகைகளையும் அவற்றின் பயன்களையும் அறிந்து கொள்வதற்கும்; அத்தியவசியமாக அமைவது மூலிகைத் தோட்டமாகும்.

மூலிகைத் தோட்டம் பற்றி ஓர் அறிமுகம்

சித்த மருத்துவத்தில் மருந்தாக தாவரங்களில் இருந்து பெறப்படும் மருந்துகளே பயன்படுகின்றன. இவை இயற்கையானதாகவும் தெய்வீகமானதாகவும் விளங்குகின்றது. இம் மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. இதனால் மக்களால் பெரிதும் விரும்பப்படுலதில்லை.
மேலைத் தேய நாடுகளில் காணப்படும் மூலிகைகளில் உள்ள வேதியற் பொருட்களிலும் பார்க்க கீழைத்தேய நாடுகளில் காணப்படும் வேதியற் பொருட்கள் வினைத்திறனானவை. எனவே இம் மருந்துப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான மூலிகைகள் தாவரங்கள் என்பவற்றை இனங்காணுதலும் உற்பத்திசெய்தலும் பாதுகாத்தலும் அவசியமானதொன்றாகும்.
மருத்துவ மூலிகைகள் தேவைக்கேற்ப சிறிய அளவிலான வீட்டுத்தோட்டங்களிலும் பெரிய அளவிலான தோட்டங்களிலும் பயிரிடப்படுகின்றன. இவை பயிரிடப்படும் போது இடம,; காலம், மண்ணின்தன்மை, வளர்ச்சிக்கான வசதிகள், வாழும்காலம், பயன்தரும்காலம் என்பன மிக முக்கியமாக கொள்ளப்படுகின்றன. இவற்றை பருவ காலத்தின் அடப்படையில் மட்டுமல்லாது நோய் தீர்க்கும் அடப்படையிலும் பயிரிடலாம்.
மருத்துவ மூலிகைகளைப் பயிரிட்டு வளர்க்கும் போது அவற்றிற்கேற்படக்கூடய தீங்குகள், அதாவது களைகள், புச்சிகள் என்பன பற்றியும், அவற்றை நிவர்த்திக்கும் வழி முறைகள் பற்றியும், கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவற்றை பயிரிடுவதற்கான மூலங்ககளை விவசாய சந்தையிலோ, அல்லது வேறு இடங்களிலோ பெறலாம். இவற்றை உணவு, மருந்து மூலம் உள்ளெடுக்கலாம். எனவே நோயின்றி வாழ்வதற்கு இயற்கை வைத்தியம் சிறந்தது. நோய் தீர்க்கும் மூலிகைகளை பயிடுவதற்கான மூலிகைத் தோட்டம் அமைப்பது பற்றி இச் செயற்திட்டம் அமைகிறது.


மூலிகைத் தோட்டம் அமைப்பதன் பொதுவான நோக்கம்
மூலிகை இனங்களை அழியாது பாதுகாப்பதோடு அவற்றை இணங்கண்டு அவற்றையும் அவற்றின் பயன்களையும் மக்களுக்குத் தெரியப்படுத்துவதே இதன் பொதுவான நோக்கமாகும்.

மூலிகைத் தோட்டம் அமைப்பதன் பிரத்தியேக நோக்கங்கள்
 பெதுமக்களிடையே மூலிகைகளையும் அவற்றின் நன்மைகளையும் அறியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தல்
 அரிதான இனத்தைப் பரம்பலடையச் செய்து அழியவிடாது பாதுகாத்தல்
 சித்த மருத்துவ மாணவர், விவசாயபீட மாணவர், பாடசாலை மாணவர் என்போரிடம் மூலிகைகள்பற்றியும், செயற்றிறன் பற்றியும், உருவவியல் பற்றியும் பரந்த அறிவை ஏற்படுத்தல்.
 மூலிகைத் தாவரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குதல்.
 வைத்திய முறைகனை பக்க விளைவுகள் ஏற்படாத வண்ணம் மூலிகைகளைக் கொண்டு வழங்குதல்.
 நாட்டின் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்களை உற்பத்தி செய்து அதன் மூலம் அந்நிய செலாவணியை பெறலாம்.
 இயற்கையில் இருந்து நேரடியாக பெறப்பட்டு தாவரங்கள் இனம் பெருகுவதால் குறைந்த விலையில் பெறுமதியான மூலிகைகளை உற்பத்தி செய்யலாம்.
 சூழல் மாசடைதல், மண்ணரிப்பு என்பன தடுக்கப்படும், மண் வளம் பெருகும்.
 இயற்கை பசளைகள் பயன்படுத்துவதால் உற்பத்திப் பொருட்களில் இரசாயணத் தன்மை குறைவு.
 மருந்து செய்யும் நிலையங்களுக்கு மூலிகைகள் தூய்மையானதாகவும், இயற்கையானதாகவும் கொடுக்கப்படுவதால் தரமான மூலிகை மாத்திரைகளை உற்பத்தி செய்யலாம்.
 தாவரவியல் சார்ந்த ஆய்வாரள்களின் ஆராய்ச்சிக்கு பயன்படும்.

மிகுதி வரும் வாரம் …

வெள்ளி, 4 ஜூன், 2010

நகைச்சுவை

நான் ரசித்த நகைச்சுவை

========== ========== ========== ========== ==========
ஒரு குடிகாரன் கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தா ன். அதைக் கண்ட ஒருவன் நீ என்ன
தேடுகிறாய்? என்று கேட்டான்.
என் கைக்கடிகாரம் கீழே விழுந்து விட்டது என்றான் குடிகாரன் வந்தவனும் தேடிப் பார்த்தான் கைக்கடிகாரம் அகப்படவில்லை.

உண்மையிலேயே - நீ கைக்கடிகாரத்தை தொலைத்தது உண்மையா

ஆமாம்

எங்கே தொலைத்தாய்?

அடுத்த தெருவில் தொலைத்தேன்.

அதை இங்கே ஏன் தேடுகிறாய்?

அந்த தெருவில் லைட் இல்லை வெளிச்சமும் இல்லை என்றான். குடிகாரன்.
========== ========== ========== ========== ==========
கள்வன்
போலீஸ் ஸ்டேஷனா? காந்திநகர் 13 ஆம் தெருவில் கள்வன் நுழைந்திட்டான்.


போலீஸ்
நீங்கள் யாரு பேசுறது


கள்வன்
நான்தான் கள்வன் பேசுறன் இங்க அடி உதை தாங்கமுடியல சீக்கிரமா வந்து காப்பாத்துங்க

ஆக்கம்- அ . பார்த்தீபன்
========== ========== ========== ========== ==========

மனைவி: டாக்டர் என் கணவர் ஒரு பேனாவை விழுங்கி விட்டார்.

டாக்டர்: இன்னும் சில நிமிஷத்தில் வந்து விடுகிறேன்

மனைவி: அதுவரை நான் என்ன செய்வது?

டாக்டர்: பென்சிலை உபயோகியுங்கள்.
========== ========== ========== ========== ==========

வியாழன், 3 ஜூன், 2010

என்னைக் கவர்ந்த கவிதைகள்

நட்பு
வைரமுத்து



நட்பு என்பது
சூரியன் போல்
எல்லா நாளும்
பூரணமாய் இருக்கும்

நட்பு என்பது
கடல் அலை போல்
என்றும்
ஓயாமல் அலைந்து வரும்

நட்பு என்பது
அக்னி போல்
எல்லா மாசுகளையும்
அழித்து விடும்

நட்பு என்பது
தண்ணீர் போல்
எதில் ஊற்றினாலும்
ஓரே மட்டமாய் இருக்கும்

நட்பு என்பது
நிலம் போல்
எல்லாவற்றையும் பொறுமையாய்
தாங்கிக் கொள்ளும்

நட்பு என்பது
காற்றைப் போல்
எல்லா இடத்திலும்
நிறைந்து இருக்கும்


தீக்குளியள்
அப்துல் ரகுமான்



ஒருவர் நினைவை
ஒருவர் கொளுத்திக்கொண்டு
இருவரும் எரிவோம்
மெதுவாக
நான் மெழுகுத்திரியாக
நீ ஊதுவத்தியா
வேதனையை நான்
வெளிச்சப்படுத்துகிறேன்
நீ மணம் ஊட்ட
அணைத்தும் என்னை
மறந்துவிடும் வேதனைக்கு
உன் ஞாபகம்
சுற்றிக்கொண்டிருக்கும்

ஞாயிற்றுத்தொகுதி

ஞாயிற்றுத்தொகுதி அல்லது சூரியக் குடும்பம் என்பது சூரியனையும் சூரியனின் ஈர்ப்புவிசையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து வான்பொருட்களையும் உள்ளடக்கியது. சூரியனைச் சுற்றி வரும் எட்டுக் கோள்களையும், இக்கோள்களின் 162 (இது வரை தெரிந்த கணக்கெடுப்பின் படி) துணைக்கோள்களையும், மூன்று குறுங்கோள்களையும், அக் குறுங்கோள்களின் நான்கு உபகோள்களையும் மற்றும் ஆயிரக்கணகான பிற வான்பொருள்களையும் உள்ளடக்கியது. பிற வான்பொருள்களாவன, விண்கற்கள் எரிகற்கள் வால்வெள்ளி, , மற்றும் விண்மீன்களின் இடையே உள்ள விண்துகள்கள் ஆகும். சுமார், 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்னர், ஒரு பிரமாண்டமான சக்திதிரல்(பிரபஞ்ச நெபுலா) நுண்கூறுகளாக நொறுங்கியதில் இருந்து, ஈர்ப்பு விசையால் இழுக்கப்படும் பல விண்ணுலகக் காட்சிப் பொருள்கள் அதாவது அண்டங்கள் தோன்றின: அதனுள் பால்வெளி அண்டத்துள் அடங்கும் சூரியனை மைய ஸ்தானத்தில் கொண்டதுதான் சூரிய குடும்பம்